இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர் ஜெயலலிதா. பெண்களை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இலவச நாப்கின், இலவச ஸ்கூட்டி உள்ளிட்ட பிரத்யேக திட்டங்களை மகளிருக்கு வழங்கினார்.

அ.தி.மு.க ஆட்சி பெண்களை பாதுகாக்கும் அரசாக செயல்பட்டது. “பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத அரசாக தி.மு.க செயல்படுகிறது”. 2026ல் பெண்களின் பேராதரவோடு அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும் என  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.