அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரிவு 15 படி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் ஆவணங்கள் அடிப்படையில் விசாரிக்கலாம். 29 ஏ சட்ட பிரிவின்படி கட்சியை பதிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. ஆனால் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.