திருவாரூரில் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, எங்களது கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன்.

எல்லா அணியும் ஒன்றாக சேர வேண்டும் எல்லா கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இதில் யாருக்கு லாபம், நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும் நான். தேமுதிகவும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போதுதான் திமுகவை வெற்றி பெற முடியும்.

அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். எங்களுடைய கோரிக்கை எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.