
பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவை கூட்ட நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சோர்ந்து போகாதீர், சலசலப்பு சரியாகி விடும். நிர்வாகிகள் யாரும் சோர்ந்து போகாதீர்கள், சில தினங்களில் சலசலப்பு சரியாகி விடும் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.