விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் நெரிசாலையில் மது போதையில் ஒரு கும்பல் தகராறு செய்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குடிபோதையில் காவலர்களை தாக்கி தகராறு செய்துள்ளனர். காவலர்களை கீழே தள்ளி தரதரவென இழுத்துள்ளனர்.

இதனால் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தகராறு செய்து காவலர்களை தாக்கிய ஏழு பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் 2 பேரை தேடி வருகின்றனர் .