
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறும் நிலையில் புதிய பயனாளிகள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திருமணம் ஆகாத 21 வயது நிரம்பிய பெண்கள் மற்றும் கணவனை இழந்து தனியாக ரேஷன் கார்டு வைத்துள்ள விதவைப் பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று முன்னதாக அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை பணியாற்றி ஊதியம் பெற்று ஓய்வு பெற்றவர்கள், அல்லது இவர்களின் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லது பெண்கள், அரசு திட்டத்தின் மூலம் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம் பெறும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதே போன்று ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவர்களால் கைவிடப்பட்ட ஓய்வூதியம் பெறும் பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியம் பெற்றால் அவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது எந்த தகுதியின்மை வகைப்பாட்டின் கீழ் வரவில்லை எனில் அவர்களுக்கு மாதம் மகளிர் உரிமைத்தகை 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.