
பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் வீட்டிற்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது 4-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அன்புமணிக்கு பக்குவமோ தலைமை பண்பு இல்லை வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என ராமதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி கூறியதாவது, ஒரு நெருக்கடியான சூழலில் கட்சி இருக்கு. என்ன சொல்றதுனே தெரியல.. மன உளைச்சலில் இருக்கேன்.. மனசுக்கு கஷ்டமாகவும், வேதனையாவும் இருக்கு. ஒரு பலமான கட்சி தனி தன்மையோடு இருக்கிற கட்சி. எல்லாம் சரி ஆகணும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கு என கூறியுள்ளார்.