இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது , காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை, தருமபுரி, தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல. உரிமையை பெறவும் பிறந்தவர்கள். 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைய உள்ளன. பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது

பெண்கள் தியாகம் செய்ய பிறக்கவில்லை. ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும். பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் உரிய மதிப்பு, மரியாதை, பாதுகாப்பு வழங்க வேண்டும். கேலி பேசுவது, பெண்களின் வளர்ச்சியை கொச்சைப்படுத்துவது இருக்கவே கூடாது. அது தான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார் .