
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அதிமுக உட் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.