கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்குக்கொண்டால் பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் தாசுக்கு சொந்தமான நாய் தெற்கு குண்டலம் மெயின் ரோடு அருகே இருக்கும் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை பார்த்து சிலர் நாயை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நாயை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.