
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி காரில் ஊர் ஊராக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம், 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேருடன் விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்த ஆறுமுகம் உட்பட ஆறு பேரும் உடனடியாக கீழே இறங்கினர். ஆனாலும் தீ விபத்தில் அகிலேஷ், சஞ்சனா, மூதாட்டி பானு ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே காயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.