
உத்திர பிரதேசத்தின் நொய்டா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரில் செக்டர் 18 பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிடத்தில் இருந்த மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக கீழே குதித்தனர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கட்டிடத்தை சுற்றி கருப்பு புகை சூழ்ந்துள்ளதும், வீடுகளில் உள்ள ஜன்னல்கள் வழியாக மக்கள் கீழே குதிக்கும் திகிலூட்டும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
नोएडा सेक्टर 18 स्थित एक बिल्डिंग में भीषण आग लग गई है! लोग अपनी जान बचाने के लिए बिल्डिंग से कूद रहे हैं। @noidapolice और @cfonoida कृपया तत्काल ध्यान दें । #NOIDA #आग pic.twitter.com/tYAU1hsyUC
— Bharatiya Talk (भारतीय टॉक न्यूज़) (@BTalknews) April 1, 2025
அதோடு இந்த தீ விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. மேலும் இந்த தீ விபத்தை போலவே நேற்றும் கிரேட்டர் நொய்டாவின் எக்கோ டெக்-3 பகுதியில் குளிர்பானம் தயாரிக்கும் 2 தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து இதுபோன்று ஏற்படும் தீ விபத்து சம்பவங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.