
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக சாம்பியன் வென்று ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது..
32 அணிகள் பங்கேற்ற 9வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்ற 3வது இடத்துக்கான போட்டியில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4வது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு வராத இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்து 1-0 என முன்னிலை வகித்து வந்தது. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயினின் கார்மோனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இங்கிலாந்து அணியால் கோல் அடிக்க முடியவில்லை.. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.