பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவருடைய பேத்தியும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யா பாச்சனுக்கு தற்போது 12 வயது ஆகிறது. சமீபத்தில் ஆராத்யா பச்சனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் இருப்பதாகவும் 10 youtube சேனல்கள் போலி தகவல்களை பரப்பியது.

போலி செய்திகள் பரப்பிய 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்யா பச்சனின் வழக்கறிஞர்களான நாயக் மற்றும் ஆனந்த் ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆராத்யா மைனர் என்பதால் வீடியோக்களை டெலிட் செய்ய வேண்டும் என்றும் இது போன்ற செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். பிரபலங்களின் குழந்தைகளாக இருந்தாலும் சரி சாமானிய மக்களின் குழந்தைகளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு குழந்தைகளும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அதற்கான உரிமையும் இருக்கிறது. குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் கூறினார்.