பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்புக்கு ஒருவருடன் பைக்கில் செல்லும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். பைக்கில் செல்லும் போது நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் பைக் ஓட்டியவர் என இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதனால் நடிகர் அமிதாப்பச்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை போலீசாரிடம் நெட்டிசன் ஒருவர் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தற்போது போலீஸ் வாகனத்தின் முன்பு நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு கைது செய்யப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் கைது செய்யப்பட்டாரா என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். ஆனால் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். எனவே சமூக வலைதளத்தில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் அமிதாப்பச்சன் இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாக சிலர் கூறி வருகிறார்கள்.