அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த ஒரு செல்வந்தரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில் கிரீன் வில்லின் கிரியர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 6 படுக்கையறைகள் கொண்ட மாளிகையில் செல்வந்தர் ரிச்சர்ட் சமரேல் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. இவருடைய மனைவி லீனா மரியா சமரேல் ஆவார்.

ரிச்சர்ட் நிறுவனத்தில் ஈக்விட்டி மேலாளர் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி லினா ஒரு கொலம்பிய நாட்டு அகதியாக இருந்த நிலையில் அமெரிக்க போர் வீரர் நலவாரியத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். கடந்த மார்ச் 28ஆம் தேதி காலை 10:20 மணி முதல் 11:30 மணி அளவில் வீட்டிலிருந்த ரிச்சர்ட் அவருடைய மனைவி லீனா மற்றும் 9 வயது மகளான சமந்தா ஆகிய மூவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை பக்கத்துக்கு வீட்டு காரர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தின் போது இவர்களுடைய மற்றொரு மகள் மற்றும் சிறு வயது மகன் பள்ளியில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை காவல்துறையினர் முழுமையாக பகிர மறுத்து வருகிறார்கள்.

மேலும் காவல்துறையினரும் மாவட்ட  அலுவலகமும் இணைந்து இந்த மர்ம மரணங்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.