பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு காதல் மோதல் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர்களிடம் முன்னாள் காதலர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அந்த முன்னாள் காதலர், “நீங்கள் எனக்குத் தெரியும், நம்ம காதல் நடந்தது உண்மைதானே?” என கேட்க, அந்த பெண் “நீ யாரு? நம்ம இடையில் எதுவுமே நடக்கல” என மறுத்தார்.

இதனால் கோபமடைந்த முன்னாள் காதலர் “ என்ன கடுப்பு ஏத்தாத” என கத்தினார். அதற்கு பதிலாக அந்த பெண் “உனக்கு என்ன தகுதி, என்கூட இருக்க?” எனக் கேட்க, மோதல் மோசமான கட்டத்திற்குச் சென்றது.

அப்போது திடீரென அந்த முன்னாள் காதலர் தனது இடுப்பிலிருந்த ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து காட்டினார். அதே நேரத்தில், அந்த பெண்ணுடன் வந்த காதலரின் குழுவில் ஒருவரும் மற்றொரு துப்பாக்கியை தூக்கி காட்டினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

வாக்குவாதம் தள்ளுமுள்ளாகவும், மிரட்டலாகவும் மாறிய நிலையில், அந்த பகுதி மக்கள் பதற்றத்தில் உறைந்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த துப்பாக்கிகள் உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மீ மேலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பதற்காக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.