
மதுரை அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் சரவணன் பேசினார். இவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, அடுத்து அதிமுகவில் இணைந்து தற்போது வரை ADMKவில் தொடர்கிறார். மருத்துவராக இருக்கும் இவர் பேசுகையில், மதுரையில் எத்தனை பாலங்கள்… பக்கத்துல தெப்பக்குளம் இருக்கு பாருங்க. தெப்பகுளத்தில் எப்பயாச்சும் தண்ணிய பார்த்திருப்போமா….
நான் சின்ன பையனா இருந்தப்ப கிரிக்கெட் விளையாண்டு இருக்கேன். இன்னைக்கு அதுல தண்ணி இருக்கு… அதுல போட்டிங் போயிட்டு இருக்கின்றோம். அளவுக்கு இன்னைக்கு மீனாட்சி கோவில்ல சுத்திப்பாருங்க…. மாசி வீதிகளை பாருங்க…. எல்லாம் கல்லு பதிச்சு, அவ்வளவு அருமையாக…. ஒளி விளக்குல மீனாட்சி அம்மனே தகதகன்னு மின்ற மாதிரி இருக்கு. அந்த அளவுக்கு இன்னைக்கு மதுரை மதுரையாக இருக்குறதுக்கு காரணம் நம்முடைய முன்னாள் அமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அத்தனை திட்டங்கள் தான்.
அதனால தாய்மார்கள் வீட்டுக்கு போகும் போது என்ன செய்தி ? அப்படின்னா ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாருல்ல… இப்ப எல்லாம் காலம் மாறி போச்சு இல்ல… எலக்சன்ல ஓட்டு கேட்டு கும்பிட்டோம்னா… எப்ப வரும் அப்படின்னு தானே கேக்குறாங்க… அதெல்லாம் வந்த உடனே, இங்கிட்டு வாங்குனதுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து…. அங்க இருந்து வாங்குனதுக்கு பனை மரத்தில் ஒரு குத்து…. அப்படின்னு வடிவேலு சொல்லுவாங்க… அந்த மாதிரி குத்திறாதீங்க…
இனி வரக்கூடிய தேர்தல்… சீக்கிரத்தில் ஆறு, ஏழு மாசத்துல நாடாளுமன்ற தேர்தல் வரப்போகுது. அதை தொடர்ந்து தமிழகத்தை யார் ஆட்சி பண்ணவேண்டும் ? என்று சட்டமன்ற தேர்தல் வரப்போகுது… இன்னைக்கு இருக்கின்ற இந்த திமுக ஆட்சியில் யாரும் சந்தோஷமா இருக்கீங்களா ? யாருக்கும் சந்தோஷம் இல்ல… எல்லாரும் காரி துப்பிட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.