நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய “குலு குலு” படத்தின் காட்சியினை சென்சார் போர்டு எவ்வித விளக்கமும் கொடுக்காமல் நீக்கியிருந்தது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் ரத்னகுமார் கூறியிருப்பதாவது “திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்ற ஒன்று.

குலு குலு திரைப்படத்துக்கு நடந்தது என்பதால் மட்டும் நான் இதனை கூறவில்லை. ஜனநாயகத்தின் முக்கியமான தூணாக இருப்பது கலை. அதன் மீது இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்கிறீர்கள். தமிழ்நாட்டை தமிழகம் என மாற்ற முயற்சி செய்வதற்கு பதில், இந்தியாவை United States Of India என மாற்றம் செய்துவிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.