இந்தி நடிகையான உர்பி ஜாவேத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் பலவித கவர்ச்சி ஆடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். அதிலும் குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் ஆகியவற்றை ஆடை போல் மாற்றி உடலை மறைத்து எடுத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகியது. இதற்கிடையில் அவர் அணியும் கவர்ச்சி உடைகள் மாணவர்களை பாதிக்க செய்வதாக கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் கவர்ச்சி உடைகள் அணிந்ததற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார் உர்பி ஜாவேத். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் உர்பி ஜாவேத் வெளியிட்டுள்ள பதிவில் “நான் அணிந்த உடைகள் வாயிலாக பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்” என கூறி உள்ளார். எனினும் சிலர் உர்பி ஜாவேத் கூறியதை நம்பாமல் பொய் சொல்கிறார் என பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.