பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் கையெறி  குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமறைவாகியுள்ளதாக பஞ்சாப் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. இதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் இன்று அதிகாலை காவல்துறையினரால் 3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்ததாவது, என்கவுண்டரில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த குர்விந்தர் சிங் (25), வீரேந்திர சிங் என்ற ரவி (23), ஜஸ்பிரீத் சிங் என்ற பிரதாப் சிங் (18) ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கமாண்டர் படையை சேர்ந்தவர்கள். மேலும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏகே-47 போன்ற துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறையினர் அளித்த ரகசிய தகவலின் படி உத்திரபிரதேச காவல்துறையினர் நடத்திய ரகசிய ஆபரேஷனில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்திர பிரதேச காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.