பிரபல காமெடி நடிகரான யோகிபாபு, அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் “பொம்மை நாயகி” திரைப்படத்தில் நடித்து உள்ளார். டைரக்டர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ். இசை அமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 3ம் தேதி ரீலிஸ் ஆகவுள்ளது. இத்திரைப்படத்தில் வட சென்னை, கபாலி ஆகிய படங்களின் வாயிலாக பிரபலமான சுபத்ராவும், “மெட்ராஸ்” புகழ் ஹரி கிருஷ்ணனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் யோகிபாபு பேசியதாவது, “அனைத்து மேடைகளிலும் என்னை நான் காமெடியன் என சொல்வதற்கு காரணம் அது தான் என் தொழில். காமெடியனாக வேண்டும் என்பதற்காகத் தான் தெருத் தெருவாக வாய்ப்பு தேடி அலைந்தேன். பலரும் எனது முகத்தை கேலி செய்து உள்ளனர். மேலும் மேக்கப் போடும் போது திட்டி உள்ளனர். தமிழ் சினிமா மட்டுமின்றி எந்த திரையுலகிற்கு சென்றாலும் நான் காமெடியன் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்..