
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டையில் நகராட்சி உரக்கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தனியாக பிரிக்கப்படுகிறது. இங்கு சீனிவாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் உரக்கிடங்கில் உள்ள இயந்திரத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்துக்கொண்டிருந்தார்.
அப்போது இயந்திரத்தில் சிக்கிய அவரின் இடது கை துண்டானது. இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.