2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில் உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் பின் தங்கியுள்ளார்.