
ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் இழுப்பரி நீடிக்கும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஹரியானாவில் காங்கிரஸ் 50 இடங்களுக்கு மேல் தொடக்க சுற்றின் போது முன்னிலை பெற்றத அடுத்த சில நிமிடங்களிலேயே 48 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனி பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் நாங்கள் தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்பை நிர்வகிக்கவில்லை என்றும், மாதிரி அளவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான சுயபரிசோதனை தேவை என்றும், அதற்கு அமைப்புகளும் உள்ளன என்றும் பதிலளித்துள்ளார்.
மேலும் அந்த அமைப்புகள் தங்கள் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், எதிர்பார்ப்பிற்கும் உண்மைக்கும் இடையிலான இடைவெளி விரக்தியை ஏற்படுத்த வழி வகுக்கும் என்றும், யாராலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ட்ரென்டுடன் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார். அரியானாவில் காலையில் 8.05அல்லது 8:10 இருக்கும் முடிவுகள் வெளியாக தொடங்கி விட்டது.
இது அர்த்தமற்றது என்று கூறிய அவர் வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கியது அதில் 9.30 மணியிலிருந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நாங்கள் முடிவை வெளியிட்டோம். இது இணையத்தில் வெளியாக கூடுதலாக அரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை 30 நிமிடத்திற்கு முன்னதாக முடியாது. எனவே வழக்கமாக முதல் சுற்று முடிவுகள் வெளி வருவதற்கு 8. 50 ஆகும். அது தேர்தல் கமிஷன் இணையத்தில் இருந்து 9:30 மணிக்குள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.