போரூர் – பூவிருந்தவல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு கட்ட சோதனையும் UP Line-ல் நடைபெற்றது. தற்போது நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனை Down line-ல் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்றது.

Down line-ல் நடைபெறும் முதற்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலேயே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. மீண்டும் இதே வழியில் சோதனை ஓட்டம் நடைபெறும் பொழுது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.