திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி அருகே கல்லூரி அமைந்துள்ளது. அங்குள்ள தனியார் ஆலைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வேப்பமரம் மற்றும் மின்கம்பங்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.