
விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கு இருந்த பாலத்தில் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கத்தில் இருந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்கள் பாலத்தின் கீழ் விழுந்து காயம் அடைந்தனர். இதையடுத்து விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 15 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.