சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளைஞர் ரேபிடோ பைக்கில் ஒரு பெண்ணுடன் பயணம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், அந்த இளைஞர்  தனது நண்பர்களிடம் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போவதாக பெருமையாக கூறியவர் என்பதும், ஆனால் சில வாரங்களில் அவர் ஒரு டெலிவரி ஓட்டுநராக மாறியுள்ளதும் தெரிய வருகிறது.  இந்த வீடியோவை அவரது முன்னாள் நிறுவனத்தில் பணிபுரிந்த தோழர் எடுத்துப் பகிர்ந்ததிலிருந்து இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை பகிர்ந்த நண்பர், “இந்த பைக்கை ஓட்டுபவர் என் நண்பர். சில வாரங்களுக்கு முன்பு தான் ‘நான் என் வாழ்க்கையை மாற்றப்போகிறேன், பெரிய தொழிலதிபராக மாறுவேன்’ என்று கூறி வேலையை விட்டு வெளியேறினார்.

இப்போது அவரைப் பார்க்கும்போது ரேபிடோ ஓட்டுநராக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இதிலேயே சந்தோஷம் இருக்கலாம்” என நக்கலாகக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த சம்பவம், பெருநிறுவன வேலைகளை விட்டு சொந்த முயற்சிக்குச் செல்லும் இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. வேலை அழுத்தம், குறைந்த சம்பளம், ஊக்கமின்மை போன்ற காரணங்களால் பலர் நிறுவனங்களை விட்டு சமீப காலங்களாக  வெளியேறுகிறார்கள்.

ஆனால் புதிய பாதையில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், அந்த முயற்சி ஒன்றே பெருமிதத்திற்கு உரியது என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. இளைஞர்களின் போராட்ட வாழ்க்கையை சமூக ஊடகம் நேரடியாகச் சித்தரித்துள்ளது.