டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியா என்பது ஆங்கில பெயராகும். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நம்முடைய நாட்டின் பெயர் பாரத் என்றால் இந்திய அரசியலமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற நிறுவனங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்ட காலனித்துவ பேரான இந்தியாவை இன்னும் ஏன் பயன்படுத்துகிறார்கள். இதை நாம் மாற்ற வேண்டும் என்று கூறினார். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணி பெயரை இந்தியா என்று வைத்தனர். இதையடுத்து இந்தியா Vs பாரத் என்ற சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.