
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.
அதில் செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டு தேர்வுகள், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வருகிறது.
டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு, அதன் பிறகு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறையும் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.