
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, தற்போது தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி தற்போது கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், அவர் தெலுங்கு பெண்களை குறித்து பேசியது தவறாகும். ஆனால் பல தலைவர்கள் பல இடங்களில் என்னென்னவோ எல்லாம் பேசி உள்ளனர்.
இதற்கெல்லாம் அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.நடிகை கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி கைது செய்தது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். இது ஒரு அநியாயமான செயலாகும் என கூறினார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பது பற்றி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி அமைப்பது குறித்து விஜய் இடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என கூறினார்.