புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே பார்கள், ஹோட்டல் பார்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்தாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.