தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் போன்ற எந்த ஒரு கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பு  இன்று சென்னையில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த போராட்டத்தில் தலைமைச் செயலக பணியாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஜாக்டோ ஜியோ அமைப்பு மற்றும் தலைமைச் செயலக சங்கம் இணைந்து இன்று சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் மாலை 5.45 மணியளவில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பு மற்றும் தலைமைச் செயலக பணியாளர்கள் அனைவரும் ஓர் அணியாக திரண்டு எங்களுடைய உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறோம் என்ற செய்தியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.