ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பெங்களூர் அணி வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வந்தனர்.

அப்போது கொண்டாட்டத்தின் இடையே இடுபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் 33 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இச்சம்பவத்திற்கு பாஜக கட்சியினர்,  மாநில அரசை குற்றச்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு குறித்த ஆலோசனை அரசு பரிசீலித்து வருகிறது.

எந்த ஒரு அரசாங்கமும் இது போன்ற அசம்பாவிதமான சம்பவங்களை ஏற்காது. இச்சம்பவம் என்னை தனிப்பட்ட முறையிலும் பாதித்துள்ளது. அந்தக் கூட்டத்தை யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை.

மேலும் இதுகுறித்த வழக்கில் 5 காவல் துறை அதிகாரிகள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் உளவுத்துறை தலைவரும் முதல்வரின் அரசியல் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை மாநில அரசு தீவிரமாக எடுத்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு அரசு சார்பில் எந்த தவறும் இல்லை என்ற போதிலும் அந்த சம்பவம் அனைவரையும் வருத்தம் அடையச் செய்கிறது.

குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு அவமானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மகா கும்பமேளாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்த போது உத்திரப்பிரதேஷ முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாரா?

அப்போது பாஜக அரசு உத்தரபிரதேச முதல் மந்திரியை ராஜினாமா செய்ய ஏன் கோரிக்கை வைக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.