
கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார்.
அப்போது வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது. இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் சோதனை செய்தபோது கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்ததுடன் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது.
போதை மருந்துகள் விற்பனையில் அதிக லாபம் பெறலாம் என்பதால் கோவையில் உள்ள தனது உறவினர்களின் வீட்டிற்கு வருவது போல கஞ்சா மற்றும் போதை மாத்திரையை கொண்டு வந்து விற்பனை செய்திருக்கிறார். அவரிடமிருந்து உயர் ரக போதை பொருளான பெத்த மெட்டமைன் மற்றும் 525 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதோடு போதை பொருள் விற்பனையில் வந்த வருமானத்தைக் கொண்டு அவர் வாங்கிய தங்க நகைகள் மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பல நாட்களாக போதை பொருள்கள் விற்பனையில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.