
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமையாக பயன்படுத்தப்பட்ட 47 இந்தியர்களை மீட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி-யில் வேலை இருப்பதாக கூறி அந்த நாட்டிற்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்பு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்பந்தனம் செய்யப்படுகின்றது. தற்போது பொஹியோ மாகாணத்தில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபட்ட 47 இந்தியர்களை மீட்டுள்ளனர். இந்த டேட்டிங் செயலிகளில் பெண்களைப் போன்று ப்ரோபைல் உருவாக்கப்படுகின்றனர். அதன் பிறகு இந்தியர்களிடம் சாட்டிங் செய்து, அவர்களை கிரிப்டோ மோசடியில் ஈடுபடுத்துவதே இங்கு பணி அமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் வேலை.
அவர்கள் அந்த வேலைகளை சரியாக செய்யவில்லை என்றால், இந்த கும்பல் அவர்களுக்கு உணவளிக்கப்படாமல் துன்புறுத்தி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்திற்கு சில தகவல் அளித்த நிலையில், உள்ளூர் அதிகாரிகளுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு 47 பேரை மீட்டு உள்ளனர். மீட்க்கப்பட்ட இந்தியர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் இருக்கும் 17 பேரை இந்தியாவிற்கு அனுப்ப பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதேபோன்று அந்நாட்டில் வேலை வாய்ப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.