தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிப்ருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிப்ருஷ் படத்தை ஓம்ராவத் இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் ஒரே நேரத்தில் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியான நிலையில் பல்வேறு விதமான சர்ச்சைகளை சந்தித்தது.

இதன் காரணமாக வழக்கறிஞர் ஒருவர் ஆதிப்ருஷ் படத்தில் ராமாயண காப்பியத்தை தவறான முறையில் சித்தரித்துள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் தற்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்ததாலும்., தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்த சில காட்சிகளை மாற்றுவதற்கு படக்குழு சம்மதித்ததாலும் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும் இவரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.