
சீன அரசு சமூக பொது ஊடகங்களில் வயதானவர்களின் ஓய்வு வயது வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன அரசு கூறியதாவது,சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இம்முடிவை எடுக்கப் போவதாக சீன அரசு வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற ஆண்டு முதல் இம்முடிவை செயல்படுத்த போவதாகவும் அடுத்தடுத்து வருகிற 15 ஆண்டுகளுக்கும் படிப்படியாக இந்த முடிவை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.
இது குறித்து கூறியதாவது, அடுத்த ஆண்டு முதல் ஆண்களின் ஓய்வு வயது வரம்பு 63 எனவும் பெண்களுக்கு அவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து 55 முதல் 58 வரையிலும் நீட்டிக்கப்படும் என அரசு ஊடகங்கள் தெரிவித்திருந்தது.
கடந்த 1949 ஆம் ஆண்டில் 36 வயதாக இருந்த மக்களின் சராசரி ஆயுட்காலம் தற்பொழுது 78 வயதாக உயர்ந்துள்ளது. இதனால், ஓய்வு ஊதியம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே சீனர்களின் ஓய்வூதிய வயது வரம்பு அதிக ப்படுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்ததாக சமூக பொது வலைதளங்கள் வெளியிட்டுள்ளன.