தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று முதல் மே 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓர் இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.