
கிரிக்கெட் விளையாட்டில் தனக்கான தனிப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். மேலும் இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் இவரை பலரும் “கேப்டன் கூல்” என அன்பாக அழைப்பர்.
இந்நிலையில் கேப்டன் கூல் என்ற வாசகத்தை டிரேட் மார்க்க்காக பதிவு செய்ய தோனி கடந்த ஜூன் 5 2023 ஆம் ஆண்டு இந்திய ட்ரேட் மார்க் ரெஜிஸ்டரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
அந்த டிரேட் மார்க் மூலம் தோனி தனது பிராண்ட் அடையாளத்தை மேம்படுத்தவும், விளையாட்டு சம்பந்தமான ஆடை மற்றும் டிஜிட்டல் துறைகளில் தனது பெயரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
அதே பெயரை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ய முயன்றது. இருப்பினும் ட்ரேட் மார்க் ரெஜிஸ்ட்ரி கேப்டன் கூல் என்ற பெயர் தோனியின் புகழ் மற்றும் அங்கீகாரத்திற்கு தொடர்புடையது என மறுத்துள்ளது.
மேலும் தோனியின் அனுமதியின்றி அந்த வாசகத்தை எந்த வணிக நோக்கத்திற்காகவும், எந்த நிறுவனமும் பயன்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.