தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் அனபெல் சேதுபதி, கேம் ஓவர், காஞ்சனா 2 மற்றும் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக படங்களில் டாப்ஸி அடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்து கொண்டார்.

அப்போது சிவப்பு நிற கவர்ச்சியான உடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி உருவம் பதித்த நெக்லஸை அணிந்திருந்தார். நடிகை டாப்ஸி கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை கவர்ச்சி உடையுடன் சேர்ந்து அணியலாமா என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை தீபிகா காவி உடை அணிந்து நடித்தது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது நடிகை டாப்ஸி கழுத்தில் மகாலட்சுமி உருவம் பொறித்த நெக்லஸை கவர்ச்சி உடையுடன் அணியலாமா என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.