ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தின் வட்டர்ஹாலில் கடந்த 20ம் தேதி அன்று ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் நான்கு எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பணிக்காக 36 வீரர்களை ஏற்றிச் சென்ற போது ஏற்பட்டது.

பேருந்து புத்காமில் உள்ள ப்ரெல் அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில், 28 வீரர்கள் பலத்த காயமடைந்தனர், அவர்களுக்கு உடனடியாக உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்ததாலும், வண்டி சாரதி கட்டுப்பாட்டை இழந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.