உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங்க் தாமே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உத்ரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயந்துள்ளது. இவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.