
பிஎஸ்என்எல் பெயரில் 5ஜி டவர் அமைப்பதாக கூறி மக்களை ஏமாற்றும் மோசடி நடைபெற்று வருகிறது. போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணத்தை கேட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். பிஎஸ்என்எல் இதனை தீவிரமாக எச்சரித்துள்ளது.
இந்த போலி இணையதளங்களில் பிஎஸ்என்எல் 5ஜி டவர் அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது முற்றிலும் பொய்யானது. பிஎஸ்என்எல் இதுபோன்ற எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
எனவே, பிஎஸ்என்எல் பெயரில் வரும் எந்தவொரு தகவலையும் நம்ப வேண்டாம். பிஎஸ்என்எலின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் மட்டுமே நம்பகமான தகவல்களைப் பெற முடியும்.
⚠️
🚨 FRAUDULENT WEBSITE ALERT 🚨Website : https://t.co/HYcATi82xW does not belong to BSNL.
Stay Alert, Stay Safe: Don’t Fall for Fake Websites! Double-Check Before You Proceed.
For latest updates kindly visit our official website: https://t.co/kvXWJQYHLt pic.twitter.com/LGR8YDfcwY
— BSNL India (@BSNLCorporate) September 4, 2024
“>
எச்சரிக்கையாக இருங்கள்! மோசடிக்கு இரையாகாதீர்கள்!