அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நம்பர் ஒன் துரோகி யார்? என கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார்?.

எந்த துரோகத்தையும் செய்வார்? என்பதற்கு நடமாடும் சாட்சிகள் பன்னீர்செல்வமும், தினகரனும். எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள். பாஜகவின் பாதம் தாங்கியாக மாறி ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் என்று அவர் கூறியுள்ளார்.