
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 102.38 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 103 டிகிரி ஃபாரன்ஹீட், கரூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம் மற்றும் திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் மையம் தகவல் தெரிவித்துள்ளது.