
எண்ணூர் கடலில் கலந்த கச்சா எண்ணெயை விரைந்து அகற்றுமாறு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எண்ணெய் கலப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், இப்பணிகளில் இருந்து சிறார்களை தள்ளி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.