
பாராளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை மக்களவையில் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு உள்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இது வக்பு மசோதா நிறைவேற்றிய பிறகு, இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.