சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், புதிதாக தேர்வான எதிர்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை கடிதம் அனுப்பியதாகவும், எனினும் சபாநாயகர் முடிவெடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கில் சட்டமன்ற சபாநாயகர், செயலாளர் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.